Monday 13 February 2017

உறையும் மனமே உரையாடு......



கடலில் கலந்த கோடி துளிகளில் ஒன்றானாயோ,
"காத்திருந்தால் முத்தாகலாம்" என்ற சிந்தனையில் உறைந்து விடாதே....
வருத்திக்கொள்,
காற்றாகி விடு,
உயரப்பறக்க உன்னயே துறவு
மேகத்தை முட்டு
நிச்சயம் சரிவாய்....
காற்றாக மறுமுறை துணியலாம் தவறில்லை,
முத்தாகும் எண்ணத்தில் மட்டும் மூழ்கி விடாதே......
மறுமுறை நீரின் புனிதமடைய மறுக்க படுவாய்......
உறைந்துப்போகும் சிந்தனையில் மட்டும் உருகி விடாதே.......
உணர்ந்துவிடு,
உடையமாட்டாய்
நல்லுரமாவாய் வரும் பொற்காலத்தில்........

அ.செ.ஸ்ருதி பார்கவி.